நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா கையில் சிகிரெட்டுடன் இருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.. ஆனால் அது அவர் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா.
இந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ரன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கி விட்டு பின்னர் விலகி கொண்டார். மேலும் விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சரண்யா கையில் சிகிரெட்டுடன் இருப்பது போல சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
ஆனால் உண்மை என்னவென்றால் அது சரண்யா இல்லை. அக்ஷரா என்பவரின் புகைப்படம் தான். இந்த புகைப்படங்களால் சரண்யா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்தனர்.