![images (10)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/images-10-3-696x391.jpeg)
நயன்தாராவுக்கு வாடகை தாயாக இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்கள் என்றும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து வந்தார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/images-12-3.jpeg)
இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னால் தான் இவர்கள் இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்டில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதங்களில் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக இருப்பதாக வெளியிட்ட அறிவிப்பு அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுகிறது.
நான்கே மாதத்தில் குழந்தை பிறந்தது எப்படி சாத்தியம் என பலரும் கேள்வி அந்த நிலையில் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மிக பிரபலமான மருத்துவமனை ஒன்றின் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/images-11-3.jpeg)
நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்தவர் அவரது கேரளத்து உறவினர் என தெரியவந்துள்ளது. அவர் வாடகை தாயாக இருப்பதற்கு அத்தனை தகுதிகளை உடையவர் என மருத்துவர்கள் அந்த பெண்மணிக்கு சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.