கோலாகலமாக நடந்த வெற்றி விழாவில் தனக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை என பிரபல நடிகை புகார் அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் பதிவு செய்த ரேட்டிங்கை இன்று வரை வேறு எந்த சீரியலில் பதிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

அந்த அளவிற்கு மிக பிரபலமாக சுமார் 1400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த சீரியலில் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஒளிபரப்பானது.

இதில் செம்பருத்தி சீரியல் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். சீரியல் நடிகர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கு எந்த ஒரு கௌரவம் அளிக்கப்படவில்லை என நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த மௌனிகா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

செம்பருத்தி சீரியலுக்காக தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்தேன். ஆனால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு மட்டுமே கௌரவம் அளிக்கப்பட்டது. இது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு கொண்டாடுகிறார்கள் அந்த சந்தோஷம் போதும் என தெரிவித்துள்ளார். இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.