MK Stalin : கஜா புயலின் போது, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், புயல் பாதித்த இடங்களில் உள்ள மக்களுக்கு, திமுக தொண்டர்கள் உதவி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புயல் பாதித்த இடங்களில் உள்ள பொது மக்களுக்கு, உணவு, உடை, மருத்துவ வசதி போன்றவற்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு, திமுக தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் புயல், மழையால் பாதித்த மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்றும், அரசு மீட்பு பணியுடன் திமுக தொண்டர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
புயல் காரணமாக, இதுவரை 82,000 பேர் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கஜா புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்க்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார்.
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018