Marriage Age : குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும், என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில், குழந்தை திருமணம் தொடர்பாக கருத்தரங்கம், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முடிவில் பல பரிந்துரைகளை மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் மற்றும் மத்திய சட்ட அமைச்சகம் ஆகியவற்றிற்கு இந்தப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அதில் கூறியிருப்பதாவது, ” பல ஆண்டுகளுக்கு முன், சட்டப்படி ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது”.
இந்நிலையில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண வயதில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது எனவும் இருவருக்கும் பொதுவாக திருமண வயது ஒரே வயதாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் , பரிந்துரை செய்துள்ளது.
இதன்மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். மேலும் கர்நாடகாவில் உள்ளது போல், ஒரு கிராமத்திற்கு ஒரு குழந்தை திருமண தடுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு பல பரிந்துரைகளை தேசிய உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.