பிரபல நடிகருடன் இணைய உள்ளார் மாரி செல்வராஜ்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். 

இந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடிகர் தனுசை வைத்து இயக்கிய கர்ணன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதை எடுத்து தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் கபடியை மையமாக கொண்டு உருவாக்க உள்ள படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். 

இது படப்பிடிப்புகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

கார்த்தி நடிக்கும் படத்தை முடித்த பிறகு மீண்டும் தனுஷ் உடன் கூட்டணி சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.