Manjima Mohan : ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால் யாருடன் நடிக்க ஆசை அஜித்தா? விஜயா? என கேட்ட கேள்விக்கு சிம்பு பட நடிகை அதிரடியாக பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிம்புவின் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் மஞ்சிமா மோகன்.
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதி ஸ்டாலினுடன் இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
உடல் எடை சற்று கூடி விட்டதால் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வரும் மஞ்சிமா மோகன் தற்போது எடை குறைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு சர்ப்ரைஸ் கால் ஒன்று வந்தது. அந்த காலில் மஞ்சிமா மோகன் பேசி இருந்தார். அப்போது கீர்த்தி சுரேஷ் ஒரே நேரத்தில் உங்களுக்கு அஜித் விஜய் என ஏறுவருடமும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் யாருடன் இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு மஞ்சிமா மோகன் சற்றும் யோசிக்காமல் தளபதி விஜயுடன் தான் சேர்ந்து நடிப்பேன் என பதிலளித்துள்ளார்.