மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படத்தில் நடித்ததை குறித்து மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

பிரபல முன்னணி பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா கோலிவுட்ல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்து அசத்திய மனுஷா கொய்ராலா அதனை தொடர்ந்து தமிழில் ஷாருக்கான், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜுன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், ஹிந்தியில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். நடுவில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா நீண்ட சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்பொழுது நடிப்பதை நிறுத்திக் கொண்டு இருக்கும் இவர் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தில் நடித்ததை குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் ‘பம்பாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, என்னுடைய வயது 20 அதனால் அம்மாவாக நடிக்க வேண்டாம் என பலரும் அட்வைஸ் செய்தார்கள். அதோடு அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு பாட்டி வேடங்கள் தான் கிடைக்கும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். அதேநேரம், மணிரத்னம் படத்தில் நடிக்க மறுப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதையும் சொன்னார்கள். உண்மையாக பம்பாய் படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.