Maniratnam Movie : சிம்பு விக்ரமை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் தனி திறமை கொண்டவர் மணிரத்தினம்.
சமீபத்தில் இவர் இயக்கி இருந்த செக்க சிவந்த வானம் என்ற படத்தில் மிக் பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது.
இந்த படத்தில் நடித்திருந்த அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என அனைவர்க்கும் சமமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார்.
இந்த படத்தை அடுத்து மணிரத்தினம் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவிய படத்தை இயக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் விக்ரம், சிம்பு நடிக்க ஒப்பு கொண்டுள்ளதை அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரின் மருமகளான ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வரும் பொங்கலுக்குள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சிம்பு, விக்ரம், அமிதாப் பச்சன் என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடிக்க இருப்பதால் இந்திய அளவில் பேசப்படும் படமாக இது இருக்கும் எனவும் நம்பலாம்.