
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் புதிய தொழிலை தொடங்கியுள்ளார் மணிமேகலை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோமாளியாக பங்கேற்று வந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் மணிமேகலை தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அது நிலத்தை சுத்தம் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதனால் மணிமேகலை சொந்த ஊரில் விவசாயம் செய்ய தொடங்கி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.