லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்க இருக்கும் படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாநகரம், மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்கள் மூலம் குறுகிய காலகட்டத்திலேயே மாபெரும் வெற்றியை கண்ட இவர் தற்போது தளபதி விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வரும் நிலையில் லோகேஷ் அடுத்ததாக இயக்கப் போகும் படம் குறித்த ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.

அப்பேட்டியில் அவர், லியோ படத்திற்கு பிறகு தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் பிரபாஸை வைத்து இயக்கப் போகும் படத்திற்கான கிரிப்ட் பணியை தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அப்படம் இருவரின் கேரியரிலும் மிகப்பெரிய படமாக இருக்கும் எனவும் கூறி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.