கூலி படத்தின் படப்பிடிப்பு குறித்து லோகேஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பிறகு நேற்று வீடு திரும்பியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாத இல்லாத காரணத்தினால் கூலி படத்தின் சூட்டிங் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் லோகேஷ் கணபதி ரஜினி சார் ஏற்கனவே 40 நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் ஒரு சிறிய சிகிச்சை உள்ளது என்று சொல்லிவிட்டார் 28ஆம் தேதியே அவளுடைய காட்சிகளை எடுத்து முடித்து விட்டோம் அதன் பிறகு தான் சிகிச்சைக்கு வந்தார். மேலும் ரஜினி சார் நலமுடன் இருப்பதாகவும் ,அடுத்த 10 நாட்களுக்கு படப்பிடிப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் பதினைந்தாம் தேதி படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் சொல்லியுள்ளார்.
இவரின் இந்த தகவல் நிலையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.