Local Election : உள்ளாட்சி தேர்தல் ஏன் இன்னும் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை கடந்த 2016 ஆம் ஆண்டில் நடத்தி இருக்கவேண்டும். ஆனால், 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசு நடத்தாமல் இருந்தது.
இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும், தேர்தல் நடத்தாமலேயே இருந்ததால், அது தொடர்பாக திமுக சார்பில் ஆர். எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் கொடுத்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதன் அறிவிப்பை உடனடியாக வெளியிடவேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், ” கடந்த ஜனவரி மாதம் நடைபெறும் என்று கூறிய உள்ளாட்சி தேர்தல் ஏன் இன்னும் நடைபெறவில்லை என கேள்வி எழுப்பினர்.
இன்னும் 4 வாரங்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் ” என அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.