வாடிவாசல் படத்தில் பஞ்சாயத்து முடிந்து சூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது வாடிவாசல் திரைப்படம். 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு டெஸ்ட் போட்டோஷூட் நடைபெற்ற அதற்கான வீடியோக்களும் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதன் பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தின் முதல் பாகம் இரண்டாம் பாகம் ஆகியவற்றின் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். 

நடிகர் சூர்யாவும் சூரரை போற்று, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து முடித்ததோடு தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கியுள்ள கங்குவா படத்திலும் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே பிரச்சனை அதனால் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் எனவும் வேறு நடிகரை வைத்து வெற்றி மாறன் படத்தை இயக்கப் போகிறார் எனவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது பஞ்சாயத்து அனைத்தும் முடிந்து படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹீரோவாக அறிவித்தபடி நடிகர் சூர்யா தான் நடிக்க போகிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சூர்யா மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.