வேற லெவல் ட்விஸ்ட்டுடன் முடிவுக்கு வரவுள்ளது தமிழும் சரஸ்வதியும் சீரியல். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். தீபக், நட்சத்திரா, நவீன், மீரா கிருஷ்ணன் என பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அர்ஜுன் கோதை குடும்பத்தின் சொத்துக்களை அபகரித்து ராகினியை ரூமில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார். பெத்த குழந்தையை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறார். 

ஏற்கனவே அர்ஜுனின் அம்மாவுக்கும் அக்காவுக்கும் கோதையின் குடும்பம் எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மை தெரிய வந்த நிலையில் அதை அர்ஜுனிடம் சொல்லியும் அவர் ஏற்கவில்லை.  

அப்படியான நிலையில் வெளியே கிளம்பிய அர்ஜூனுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுக்கிறார் அவருடைய அம்மா. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தமிழ் அர்ஜுனிடம் இருக்கும் குழந்தையை வாங்கி இது என் தங்கச்சி குழந்தை கொன்னுடுவேன் மிரட்டுறான் என்று சொல்லி ரத்த வாந்தி எடுக்கிறார். 

இப்படி எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் முடிவுக்கு வர உள்ளது தமிழும் சரஸ்வதியும் சீரியல். இதை சீரியலுக்கு பதிலாக வரும் திங்கள்கிழமை முதல் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.