
லெஜன்ட் சரவணனை தொடர்ந்து பிரபல நகைக்கடை உரிமையாளர் ஹீரோவாக போவதாக தகவல் வெளியானதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Lalitha Jwellery Kiran Kumar About Acting : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை உரிமையாளர் சரவணன் அவர்கள் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

தி லெஜன்ட் திரைப்படத்தை தொடர்ந்து லலிதா ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார் ஹீரோவாக நடித்த போவதாக தகவல் பரவியது. இது குறித்து அவரிடம் விசாரிக்கையில் தற்போது வரை அப்படி ஒரு எண்ணம் என்னிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இருந்தாலும் அருளைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்கள் அடுத்தடுத்து ஹீரோ பார்க்க களமிறங்குவார்கள் என சொல்லப்படுகிறது.