நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே இதற்காக தான் என நடிகை கஸ்தூரி பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Kasturi Tweet About Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை நிறைவு செய்து அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
மூன்றாவது சீஸனில் வனிதா, கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை கஸ்தூரி வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே கலந்து கொண்ட போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் நடிகை கஸ்தூரி வெறும் புஸ்வாணமாகவே இருந்து விட்டு வெளியே வந்தார். தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ள நிலையில் இவர் பிக் பாஸ் குறித்து பதிவிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் No words to thank @vijaytelevision who have withheld my payment for over a year.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். I never believed any of your fake promises, but even I didnt expect this என குறிப்பிட்டு உள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவு பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்