திரும்பவும் பக்கெட் பிரியாணி சாப்பிட நேரம் வந்துவிட்டது என கைதி 2 குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்திக். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

இந்த நிலையில் நடிகர் கார்த்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கைதி 2 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது இரண்டு படம் முடிஞ்சிடுச்சு அவை இரண்டும் அடுத்தடுத்து வெளியாகும். 

அடுத்ததாக சர்தார் 2 தொடங்க போறோம், இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் வர சொல்லி இருக்காரு. திரும்பவும் பக்கெட் பிரியாணி சாப்பிட நேரம் வந்துவிட்டது என்று கைதி 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். 

இந்த தகவலால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.