Karnataka Chief Minister HD Kumaraswamy – சென்னை: “மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்” .
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ரூ. 5600 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது’ . மேலும் இதன் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
மத்திய நீர் வள ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு கண்டித்து வருகிறது.
மேலும், இரு தினங்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், அவர்களது தோழமை கட்சிகளுடன் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில், மேகதாதுவுக்கு மத்திய அரசு அளித்த ஒப்புதலை கண்டித்து, இன்று மாலை சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், “மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- க்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மேகதாது அணை குறித்த பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்”.