108 ஏழை பெண்களுக்கு புத்தாண்டு பரிசாக கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக 108 ஆட்டுக்குட்டிகளை இயக்குனர் S.A .சந்திரசேகரன் வழங்கினார்.
குமரி மாவட்டம் அழகை மண்ணில் ST .ANTONY ‘S SPORTS CLUB சார்பில் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட கபடி போட்டி நடைபெற்றது.
இந்த விழாவினை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அழைப்பாளர்களாக புரட்சி இயக்குனர் SA .சந்திரசேகர், கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவரும், இயக்குனருமான P.T செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி ஹரியானா மற்றும் ஈரோடு அணிக்கான போட்டியை துவக்கி வைத்தனர் .
பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்தோடு விளையாட்டு போட்டியை காண்பதற்கு திரளாக கலந்து கொண்டனர். விளையாட்டின் இறுதியில் ஈரோடு அணி வெற்றி பெற்றது.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கான முதல் பரிசு” ஒரு லட்சம் ” ரூபாயை கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் P.T. செல்வகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக அஞ்சு கிராமத்தில் 108 ஏழை பெண்களுக்கு புத்தாண்டு பரிசாக கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக 108 ஆட்டுக் குட்டிகளை புரட்சி இயக்குனர் S.A சந்திரசேகர் வழங்கினார். இந்நிகழ்வினை கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் PT செல்வகுமார் மற்றும் செயலாளர் சதீஷ் ராஜா ஏற்பாடு செய்திருந்தார்கள் .