ஒரு முன்னணி நடிகர் நடிக்கும் திரைப்படம் வெளிவரும் முன்பே, அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் கூட ஏதேதோ யூகித்து.. அளவில்லாமல் அள்ளி வழங்குவது வாடிக்கை ஆயிற்று. வாசிப்பவர்களுக்கு இது வேடிக்கை ஆயிற்று.!

அவ்வகையில், கைதி-2 படத்தின் சூட்டிங்கே இன்னும் ஆரம்பிக்கலை. இவனுங்க படுத்துற பாடு இருக்கே.. அதாவது..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கிற திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ். முன்னதாக, கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களை இயக்கி, வெற்றி கண்டார்.

இவை அனைத்திற்கும் வேராக அமைந்து, கிளை பரப்பியது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “கைதி” திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இருந்து தான் லோகேஷ் கனகராஜின் ‘சினிமா கேரியர்’ ஆரம்பமானது எனலாம். இந்த சூழலில் விரைவில் அப்படத்தின் 2-பாகத்தை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

‘கூலி’ திரைப்பட பணிகளை முடித்த உடனேயே ‘கைதி’ படத்தின் 2-ம் பாக பணிகளை, தான் துவங்க உள்ளதாக அண்மையில் லோகேஷ் அறிவித்திருந்தார். ஆனால், கூலி திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருந்த ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனை சென்று திரும்பி உள்ள அவர், சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

ஆகையால், குறிப்பிட்ட தேதியில் கூலி திரைப்படத்தின் படப் பிடிப்பு பணிகள் முடிக்கப்படுமா? அல்லது இப்படத்தின் பணிகள் நீளுமா? என்பது சந்தேகத்திற்கு இடமாக மாறி உள்ளது. இந்த திரைப்படத்தை முழுமையாக முடித்து அதனுடைய ரிலீஸ் தேதியை உறுதி செய்த பிறகு தான், ‘கைதி’ படத்தின் 2-ம் பாக பணிகளை தொடரச் செல்வார்.

இதற்கிடையில், கைதி-2 திரைப்படம் குறித்து வெளியான சில தகவல்களின்படி; ‘விக்ரம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் கட்சியில் இருந்துதான் கைதி 2 படம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, விக்ரம் பட இறுதிக் காட்சியில், டில்லி என்ற கதாபாத்திரத்தில் கைதி படத்தில் நடித்த கார்த்தியின் ரெஃபரன்ஸ் காண்பிக்கப்பட்டிருக்கும். திருச்சியில் ரோலக்சின் கடத்தல் பொருட்களை சிக்க வைத்தது டில்லி தான் என்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ஆகவே, கைதி 2 என்பது, அண்ணன் ரோலக்ஸ் (சூர்யாவிற்கும்), தம்பி டில்லி (கார்த்தி)க்கும் நடக்கும் கதையாக இருக்கும் என்று ‘கதைத்து’ சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அறிவுக்கொழுந்தாம்.. ஆர்வக்கோளாறாம்.. அளவே இல்லையாம்.. பார்க்கலாம்.!