பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஜோவிகா வைல்ட் கார்ட் குறித்து பேசுகின்றார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டார்.
அவரது வெளியேற்றத்தை பலர் கொண்டாடினாலும் அதற்கு இணையான மக்கள் வருத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர் வனிதா உடன் சேர்ந்து லைவ் வீடியோவில் பேசிய போது வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்து எழுப்பி உள்ளனர்.
அதற்கு ஜோவிகா திரும்பவும் வேண்டாம், நான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததை சந்தோஷம்தான் படுகிறேன். தற்போது வரை கிடைத்த அனுபவங்களே போதும் என தெரிவித்துள்ளார்.