Jayalalitha Statue
Jayalalitha Statue

Jayalalitha Statue – சென்னை: சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ரவி என்பவர் தொடுத்த வழக்கில், “சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும்” தெரிவித்து ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் மேல்முறையீடு காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகவும்,

இன்றைய தேதியில் குற்றவாளி இல்லை என்பதால் அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதன்படி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது” என கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஜெயலலிதா குற்றவாளியல்ல சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன்னரே ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

எனவே ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என சொல்ல முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு ஆகும் இதில் நீதிமன்றம் தலையிடாது எனவும் தெரிவித்தனர்.