ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பற்றி இயக்குனர் நெல்சன் பகிர்ந்து உள்ள சுவாரசியமான தகவல்கள் வைரல்.

இந்திய திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் நிலவரங்களை இயக்குனர் நெல்சன் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், தன்னுடைய கடந்த படங்களைக் காட்டிலும் இத்திரைப்படத்தில் அதிக சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் பகிர்ந்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.