Panjab Accident

அமிர்தசரசில் தசரா கொண்டாடத்தின் போது ரயில் தண்டவாளத்தில் நின்று இராவணன் எரிக்கும் காட்சியை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது அசுர வேகத்தில் வந்து ரயில் ஒன்று மோதி சென்றது , இதில் சம்பவ இடத்திலேயே 60பேர் பலி ஆகினர்.

இந்நிலையில், இந்த விபத்திற்கு காரணம் செல்ஃபி மோகம் தான் என தெரியவந்துள்ளது. தசரா கொண்டாடத்தின் போது ரயில் தண்டவாளத்தில் நின்று இராவணன் எரிக்கும் காட்சியை பார்த்து கொண்டிருந்தவர்கள் ரயில் வருவதைகூட கவனிக்காமல் ஏராளமானோர், தண்டவாளத்தின் மீது நின்று கொண்டு தங்களது செல்போன் மூலம் அதனை படம் எடுத்து கொண்டு இருந்தனர்.

இவை அனைத்தும் விபத்து நடந்தபோது எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதி சென்றதை பார்த்துக் கூட சிலர் அதையும் தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்ததை கண்டித்து பலர் வேதனையும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.