IPL Auction 2019
IPL Auction 2019

IPL Auction 2019 – வருகிற 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான தேர்வு ஏலம் இந்த மாதம் 18-ஆம் தேதி நடக்க இருக்கின்றது.

ஏலம் பற்றிய தேதி மற்றும் இடம் ஆகியவற்றை பிசிசிஐ நேற்று தெரிவித்தது. ஏலம் 18-ஆம் தேதி ஜெய்பூரில் நடைபெறும் என்று தெரிவித்தது.

ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக 8 அணிகள் தாங்கள் தக்கவைதுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

அதில் சில மூத்த வீரர்களில் பெயர்கள் இடம் பிடிக்கலாம் இருந்தது. குறிப்பாக பஞ்சாப் அணியில் யுவராஜ் மற்றும் டெல்லி அணியில் கம்பீரும் இடம் பிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில், மும்பை அணி, ராஜஸ்தான் அணி போன்ற மற்ற அணிகளும் நட்சத்திர வீரர்களை விடுவித்திருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே-வை சென்னை சீனியர் கிங்ஸ் என கோலி செய்தவர்களுக்கு கோப்பையை வெற்று தோனி தலைமையிலான சென்னை அணி பதிலளித்தது.

அதனால் இந்த முறை சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பஞ்சாப் அணி விடுவித்த யுவராஜ் சிங்கை ஏலம் எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தோனி-யுவராஜ் ஜோடி உலக கோப்பையை வெற்றி ஜோடியை சிஎஸ்கே-வில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலவாறு கோரிக்கை வைத்துள்ளனர். என்ன நடக்கும் என்று 18-ஆம் தேதி தெரிந்துவிடும்

இதனால், பிசிசிஐ ஐபிஎல் ஏலம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த முறை பெங்களூருவில் ஏலம் நடத்தாமல் ஜெய்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், வரும் 2019-ல் தேர்தல் நடக்க இருப்பதால், இந்தியா இல்லாத பிற நாடுகளில் போட்டி நடத்த இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்தது.