Indonesia : இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் சென்ற விமானம் இன்று திடீரென மாயமானதாக செய்திகள் பரவியது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது, இதனால் விமானம் மாயமானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட லயன்ஏர் நிறுவனத்தின் விமானம் , கடலில் விழுந்து மூழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் 180 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்திருக்கலாம், தற்போது அவர்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.
விமானத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், லயன் ஏர் விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட பயணிகளுடன் சேர்த்து 188 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளார்களா? பலி எண்ணிக்கை எவ்வளவு? என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ளன இந்த விமான விபத்து அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
On board crashed Lion Air JT610 plane :
– 178 adults
– 1 child
– 2 babies
– 2 pilots and 5 flight attendants#jt610 #Indonesia pic.twitter.com/FzMiUlhMqm— Sundar Ra. SRIRAM (@Sriramsundarra1) October 29, 2018