IlaiyaRaja : இளையராவிற்காக தயாரிப்பாளர்கள் விட்டு கொடுப்பதை விட எங்களுக்காக (தயாரிப்பாளர்கள்) அவர் தான் விட்டு கொடுக்க வேண்டும் என பி.டி செல்வ குமார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வ குமார் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
அந்த சந்திப்பில் இளையராஜா தன்னுடைய பாடலுக்காக வாங்கும் ராயல்டி தொகையை தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த தொகையால் தயாரிப்பாளர்கள் ரூ 200 கோடிக்கும் அதிகமாக ஏமார்ந்து இன்று நடுத்தெருவில் நிற்கும் நிலைமையில் உள்ளனர் என கூறியிருந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் பி.டி செல்வகுமார் அவர்களிடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதில் இளையராஜாவிற்காக தயாரிப்பாளர்கள் விட்டு கொடுக்கலாமே என கேள்வி கேட்டனர்.
அதற்கு செல்வகுமார் அவர்கள், தயாரிப்பாளர்கள் விட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு என ராயல்டி தொகையை ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை கொடுத்தால் நாங்கள் இந்த பிரச்னையை கை விட்டு விடுவோம் என பதிலளித்துள்ளார்.
மேலும் இளையராஜாவிற்கு எதிராக போராட வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் இல்லை. தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம். இதில் எவ்வித அரசியலும் இல்லை. ஒத்த கருத்துடன் எங்களுக்கு பல தயாரிப்பாளர்கள் ஆதரவாக உள்ளனர் எனவும் பேசியுள்ளார்.
இன்று நீங்கள் பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கலாம். ஆனாலும் ஆரம்பத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் ஒளியேற்றியதும் தயாரிப்பாளர்கள் தான்.
அப்படி இருந்தும் இன்று பல தயாரிப்பாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கான ராயல்டி உரிமையில் கொஞ்சமாவது விட்டு கொடுங்கள் என இளையராஜாவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.