தேசிய விருது வழங்குதல் குறித்து, நடிகர் பிரித்விராஜ் கருத்து..

Web Ads

பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடுஜீவிதம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜ் தெரிவிக்கையில், ‘ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை.

மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்கி, திரையரங்கங்களுக்கு வந்து அந்த அனுபவத்தை உணர்பவர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், மக்கள் ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு ஏற்கெனவே மிகப்பெரிய விருதை வழங்கியுள்ளனர்’ என்றார்.

முன்னதாக, இவர் இயக்கி நடித்து வெளியான ‘எம்புரான்’ படம் சர்ச்சைக்குள்ளாகி சில காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது. வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

i dont make films for awards prithviraj
i dont make films for awards prithviraj