Heavy Rain in Tamil Nadu
Heavy Rain in Tamil Nadu

Heavy Rain in Tamil Nadu  – சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைதொடர்ந்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, ” வலுபெற்ற குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளை நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர் மழை பெய்யும்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக, காரைக்கால் மற்றும் தரங்கம்பாடியில் 7 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் சென்னை செம்பரம்பாக்கத்தில் 5 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

இதன் மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிதமான மழையும், வட தமிழகத்தில் கனமழையும் பெய்யும்.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்” இவ்வாறு கூறினார்.