ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணா.
தமிழக அரசியலில் தமிழக பகுஜன் சமாஜ் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆறு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் நேற்று சென்னையில் இவரை கொலை செய்தது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணா அவர்களும் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதாவது, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இழப்பு இச்சமூகத்திற்கு பேரிழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற கொடூர குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இனியும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி படுத்த வேண்டும் என விஷாலின் மேனேஜர் வி ஹரி கிருஷ்ணா கோரிக்கை வைத்துள்ளார்.