தனது மகளுக்கு பெயர் சூட்டியுள்ளார் காயத்ரி யுவராஜ்.
தமிழ் சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ்.
மேலும் இவர் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது கணவர் பெயரையும் மகளின் பெயரையும் சேர்த்து யுகா என பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.