Gaja Cyclone :
கஜா புயல் இன்று தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் கூடுவதாகவும் தெரிவித்துள்ளனர்
இந்த புயல் கரையை கடக்கும்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் , கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக மாறியுள்ளது.
இந்த புயலானது முன்பு சென்னை மற்றும் கடலூர் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த புயல் வரும் 15ம் தேதி கடலூர், பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் பலத்த மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வரும் நவம்பர் 15ஆம் தேதி , இந்தப் புயல் கரையை கடக்க உள்ளது. அதனால் , சென்னை மட்டுமின்றி கடலூர் மாவட்டங்களிலும் பெரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த புயல் 140 கிலோ மீட்டர் வேகம் அடைய வாய்ப்புள்ளது. மேலும், இவ்வாறு காற்றுவீசும் பட்சத்தில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கஜா புயலிடம் இருந்து மக்களை பாதுகாக்க , தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தமிழகம் வர உள்ளனர்.
புயலின் தாக்கத்தை பொறுத்து மேலும் அதிகமாக மீட்பு படையினர் வர வாய்ப்புள்ளது.
மேலும் கஜா புயல் காரணமாக, கடலோர பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும்வரை கடலோர பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.