கொல்கத்தாவில்  உள்ள ரசிகர்கள் கமல்ஹாசனுக்காக கோவில் கட்டி வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் , விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தயாரிப்பு முதல் வெளியிடும் வரை எப்படி எல்லாம் ஒரு படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. 

எந்த படத்திற்கும் இல்லாமல் இந்த விக்ரம் படத்திற்கு மட்டும் ஐந்து மொழிகளிலும் கமல்ஹாசன் அவரே நேரில் சென்று புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதற்கேற்றார்போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் அமைந்திருந்தது. 

அதனால் கொல்கத்தாவில் கதிர்பூர் நகரில் இருக்கும் கமல்ஹாசன் ரசிகர்கள் அவருக்காக கோவில் ஒன்றை கட்டுவதற்கு திட்டம் போட்டு வைத்திருந்தனர். தற்போது ‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதும் கோவில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

 மேலும் இந்த கோவிலை திறந்து வைப்பதற்காக கமல்ஹாசன் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தனக்காக கட்டப்பட்டு வரும் கோவிலை திறந்து வைப்பதற்கு கொல்கத்தாவிற்கு செல்வாரா என்று ரசிகர்களின் இடையே கேள்வியை எழுப்பியுள்ளது.