போலீசாருடன் வந்த ஜனனிக்கு குணசேகரன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஜனனி போலீசுடன் வீட்டுக்கு இப்பவும் உங்க பையனை விட்டு கொடுக்க மாட்டீங்களா என விசாலாட்சியிடம் கேட்க அவர் அமைதியாகவே இருக்கிறார்.
அதனை தொடர்ந்து குணசேகரன் என் அப்பத்தாவை நான் நல்லபடியாக தான் பார்த்துக்கிட்டு இருக்கேன், இந்த பொண்ணு பொய் சொல்லிட்டு இருக்கு என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் ஜனனி அடுத்து என்ன செய்வார் என இன்றைய எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.