முதல் இரவில் கரிகாலனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஆதிரை.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆதிரை மற்றும் கரிகாலனுக்கு முதல் இரவு ஏற்பாடுகள் நடந்திருக்க அதிரை கரிகாலனிடம் யாராவது ஏதாவது கேட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லணும் கரிகாலன் நான் பாவம் இல்லையா என அழுது கொண்டே கேட்கிறார். மேலும் யோவ் மாமா எல்லாம் முடிஞ்சிடுச்சி என புலம்புகிறார்.
அடுத்ததாக மறுநாள் காலையில் குணசேகரன் கரிகாலன் நேற்று என விசயத்தை சொல்ல வர நேத்து என்ன வியாழக்கிழமை இன்னிக்கு வெள்ளிக்கிழமை என நக்கல் அடிக்கிறார். இந்த நேரம் பார்த்து அண்ணே என ஜான்சி ராணி என்ட்ரி கொடுக்கிறார்.
ஜனனி ஏதோ திட்டம் போட்டு இருப்பதாலேயே ஆதிரை முதலிரவில் அப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.