அப்பத்தாவை கொன்னுட்டாங்க என்ன ஜனனி உண்மையை உடைக்க விசாலாட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் வீட்டுக்கு வரும் ஜனனி இவங்க எல்லாரும் சேர்ந்து அப்பத்தாவை கொன்னுட்டாங்க என்று சொல்ல விசாலாட்சி உட்பட எல்லோரும் கண்ணீர் விடுகின்றனர்.
அதைத்தொடர்ந்து கரிகாலன் ஜஸ்ட் மிஸ் அத்தை இல்லனா எல்லாரும் பீஸ் பீஸா சிதறி இருப்போம் என்று சொல்ல சக்தி போதும் நிறுத்துங்க அப்படித்தானே சொல்லி எல்லாரையும் நம்ப வச்சிருக்கீங்க என பதிலடி கொடுக்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வரும் ஈஸ்வரி ஜீவானந்தத்தை போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க என்று சொல்ல விசாலாட்சி இனமும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க அப்படி என்ன வசியம் பண்ணான் என்று கேள்வி கேட்க போது நிறுத்துங்க அத்தை என பதிலடி கொடுக்கிறார் ஈஸ்வரி.