விசாலாட்சி அதிர்ச்சி கொடுக்க குணசேகரன் பிள்ளைகள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சக்தி புதிய கம்பனி திறக்கப் போவதை பற்றி சொல்ல குணசேகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது விசாலாட்சி யார் என்ன சொன்னாலும் என்னுடைய நகையை சக்திக்கு தான் கொடுப்பேன் என்று குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து தர்ஷன் தன்னுடைய அம்மா ஈஸ்வரி இதற்கு அப்புறம் நான் காலேஜ் போகல, இவர் கட்டுற பணத்துல என்னால படிக்க முடியாது என்று சொல்கிறார்.
நந்தினி தர்ஷினியிடம் நீயும் இதே முடிவில் தான் இருக்கியா என்று கேட்க அவரும் ஆமாம் என பதில் கொடுக்கிறார்.