தர்ஷினி ரவுடிகளிடம் தப்பி ஓடி வர சக்தியிடம் கலங்கி நின்று உள்ளார் கதிர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷினி ரவுடிகளிடம் இருந்து தப்பி ஓடி வருகிறார். ரவுடிகளும் அவரை துரத்தி தேடி வருகின்றனர்.
இங்கே ஹாஸ்பிடலில் கதிர் சக்தியிடம் நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன் எல்லாத்தையும் அந்த மனுஷனுக்காக தானடா பண்ணேன் என கலங்கி நிற்கிறார்.
பெண்கள் கையில் தர்ஷினி எழுதிய லெட்டர் கிடைக்க அதில் கொடுமைப்படுத்துறாங்க என எழுதி இருப்பதை பார்த்து என்னக்கா கொடுமை படுத்துறாங்கனு எழுதி இருக்கா என்று நந்தினி பதறுகிறார்.
பிறகு தர்ஷினியை தேடி ஓட இன்னொரு பக்கம் தர்ஷினி இவர்களை பார்த்து விடுவது போல் இருக்கிறது.