மீண்டும் குணசேகரன் பக்கம் சாய்ந்துள்ளனர் கதிர் மற்றும் ஞானம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஸ்டேஷனுக்கு வந்த கதிர் போலீஸிடம் என்னன்னு ஜெயில்ல அடைச்சிடுவீங்களா என்று கேட்க போலீஸ் கதிரை பார்த்து லூசா நீ ஸ்டேஷன்க்கு வந்து என்ன பேசிட்டு இருக்க என்று கேள்வி கேட்கின்றனர்.
வீட்டில் எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான் என்று விசாலாட்சி கோபப்பட இதுக்கும் எங்க அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தர்ஷினி பதில் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து ஜனனி கெட்டவங்க எப்பவும் ஜெயிச்சுகிட்டே இருக்க முடியாது.. அடி விழும் போது பெருசா விழும் என பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக குணசேகரன் இன்னைக்கு அவளுங்க முன்னாடி தோத்து போயிட்டேன். ஆனால் ஒன்று என்று எதையோ சொன்ன அதைக்கேட்டு கதிர், ஞானம் கண் கலங்குகின்றனர்.