ஆதி குணசேகரனின் இழப்பை ஏற்க முடியாமல் சக நடிகர்கள் பதிவுகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மாரி முத்து.

இயக்குனராக இரண்டு படங்களை இயக்கிய நடிகராக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் தான் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இப்படியான நிலையில் இவர் நேற்று காலை எட்டு முப்பது மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இவருடைய மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் பலரில் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் இன்று மாரி முத்துவின் சொந்த ஊரில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மாரிமுத்துவின் மறைவு குறித்து எதிர்நீச்சல் பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் கண்ணீருடன் பதிவு செய்துள்ள பதிவுகள் பலரின் கவனத்தை கண்கலங்க வைத்து வருகிறது.

இதோ அந்த பதிவுகள்

உங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எங்களது இதயங்களில் மகிழ்ச்சியாக ஓய்வெடுங்கள் என தெரிவித்துள்ளார் ஜனனி.
ஏன் சார் இவ்வளவு அவசரம்? உங்களுடைய உழைப்பு, பேச்சு, அறிவுரை எல்லாமே கண்ணு முன்னாடி அப்படியே இருக்கு என ஈஸ்வரி கண் கலங்கியுள்ளார்.
நேற்று வரை எங்களோடு இருந்த நீங்கள் இன்று இல்லை. நந்தினியாக உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் மாமா என வருத்தப்பட்டு உள்ளார் ஹரிப்பிரியா.
எதுக்கு சார் இவ்வளவு அவசரம் உங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கலங்கியுள்ளார் ரேணுகா.
முந்தைய நாள் தன்னுடைய போனில் பேசிய விஷயங்களை மனம் உடைந்து பதிவு செய்துள்ளார் ஆதிரை.
ஏமாற்றத்தில் இதயம் வலிக்கிறது, ஏன் மாமா பாதியில் நிறுத்திட்டீங்க என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார் கரிகாலன்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.