எதிர் நீச்சலை தொடர்ந்து முடிவுக்கு வர உள்ளது சன் டிவியின் சூப்பர் சீரியல் ஒன்று.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வந்த எதிர் நீச்சல் சீரியல் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
அதை தொடர்ந்து இன்று முதல் சிங்க பெண்ணே சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8 மணிக்கு மருமகள் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இப்படியான நிலையில் எதிர் நீச்சல் சீரியலை தொடர்ந்து விரைவில் சுந்தரி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் கிளைமேக்ஸ் எப்போது என தெரிய வரும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுந்தரி சீரியலை முடிக்கிறதுக்கு பதிலாக வானத்தை போல சீரியலை முடிக்கலாம் எனவும் கருத்து கூறி வருகின்றனர்.