பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அப்படியான சீரியல்களில் ஒன்றுதான் மிஸ்டர் மனைவி.
செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா நாயகி நடிக்க தொடங்கிய இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் அதன் பிறகு டல்லடிக்க தொடங்கியது.
இந்த நாள் சீரியலின் ஒளிபரப்பு நேரம் இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பெரிய அளவில் ரேட்டிங் வராத காரணத்தினால் வெகு விரைவில் சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே சமயம் ஷபானாவிற்கு சன் டிவியில் புதிய ப்ராஜெக்ட் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.