படப்பிடிப்பு தளங்களில் ஒலி மாசை ஒழிப்பது குறித்து இயக்குனர் சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் சிவா. சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றமையால் சிறுத்தை சிவா என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இவர் தற்போது சூர்யாவின் 42வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்று தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் ஒலி மாசு குறித்து சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புறம் மற்றும் ஸ்டூடியோ தலங்களில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி ஏற்போம். அதை சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்து படக்குழுவினருக்கும் பொது மக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம். ஒலி மாசை ஒழிப்போம்!! என்று பதிவினை பகிர்ந்திருக்கிறார்.