நடிகர் தனுஷ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது தனுஷ் 50 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை பெற்று வருகிறது.
மேலும் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது 25 கோடி இருந்தால் 30 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த தனுஷ் பட்டென சம்பளத்தை ரூ 50 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் தற்போது இது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.