தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் ரி-மேக்கில் நடித்து வருகிறார்.

மேலும் சிம்பு ஜி.டி நந்து இயக்கத்தில் கெட்டவன் என்ற படத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த படம் பாதியில் நின்று விட்டது.

தனுஷால் டிராப்பான சிம்புவின் படம் - இயக்குனரால் வெளியான அதிர்ச்சி தகவல்.!

இதற்கு காரணம் தனுஷ் தான் என பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது ஜி.டி நந்து கூறியதாவது, முதலில் சிம்புவுடம் இந்த படத்தின் கதையை கூறினேன்.

அவர் நடிக்க ஒப்பு கொள்ளாததால் ஜீவா, பரத் ஆகியோரிடமும் கூறியிருந்தேன். தனுஷிடமும் கதையை கூற முயற்சி செய்தேன் ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.

இதனையடுத்து சிம்புவே நடிக்க ஒப்பு கொண்டு படப்பிடிப்புகளும் தொடங்கின. அப்போது தனுஷ் சிம்புவுக்கு போன் செய்து நீ கதையை வேணாம்னு சொன்னதும் அவர் என்கிட்டே கதை சொல்ல வந்தாரு. இந்த மாதிரி நன்றி இல்லாதவர்களுக்கு ஏன் கால்ஷீட் குடுக்கற? என கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிம்புவுக்கும் எனக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட அதுவே படப்பிடிப்புகள் பாதியில் நிற்க காரணமாகிடுச்சு என கூறியுள்ளார்.