Panjab Accident

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் தசரா பண்டிகையை முன்னிட்டு இராவணன் உருவபொம்மை எரி்க்கும் காட்சியை காண ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராவிதமாக அங்கு வந்த ரயிலில் மோதி 60 பேர் உயிரிழந்தனர்.

அமிர்தசரசில் நேற்றிரவு, ரயில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதியில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் இராவணன் உருவபொம்மை எரி்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் அவ்விடத்தில் ஒருபாதி மக்கள் ரயில் தண்டவாளத்தில் நின்று விழாவை கண்டனர்.

அந்நேரத்தில், உள்ளூர் ரயில் ஒன்று எச்சரிக்கை ஒலி எழுப்பியவாறு, அசுர வேகத்தில் வந்தது. ஆனால் வெடி சத்ததால் அந்த ஒலி மக்களுக்கு கேட்கவில்லை. சற்று நேரத்தில் அங்கு ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதி அவர்களை நசுக்கி தள்ளிசென்றது. இதில் சம்பவ இடத்திலேயே 60பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பலர் பலத்த காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசரா பண்டிகையில் நடந்த இந்த சோகத்தால் நாடு முழுவதும் மக்களிடையே சோகம் நிலவி வருகிறது.

இந்த விபத்து குறித்து பல தலைவர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

https://platform.twitter.com/widgets.js

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.