சூர்யாவின் படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை நீதிமன்றம். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Court Order on Soorarai Potru Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்தது.
மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு
தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது இந்தியில் இந்தத் திரைப்படம் ரீமேக் ஆக உள்ளது. இந்தியிலும் நடிகர் சூர்யாவே பிரபல நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அதாவது குனீத் மொங்கோ நடிகர் சூர்யா சூரரைப்போற்று இந்தி ரீமேக் விவகாரத்தில் என்னை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
இதனை விசாரித்து இடைக்கால தடை விதித்துள்ள நீதிமன்றம் இருவரும் நட்பு ரீதியாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.
வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா?