சித்ரா தற்கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியினாக நடிகையாக பல சீரியல்களில் நடித்து அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என சொல்லப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜாமினில் வெளிவந்துள்ள இவர் குற்ற பத்திரிக்கையில் இருந்து தன்னுடைய பெயரை நீக்க வேண்டும் சித்ரா தற்கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் ஹேமந்த் குற்றவாளி என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அவரை குற்ற பத்திரிக்கையில் இருந்து நீக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.