நடிகர் கூல் சுரேஷ் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு வழக்கம்போல் பரபரப்பான ரிவ்யூவை கொடுத்திருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிவ்யூ மூலம் பிரபலமான நடிகர் கூல் சுரேஷ் வழக்கம்போல் இப்படத்திற்கும் ரிவ்யூ கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது பிரின்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தின் தயாரிப்பாளரான அன்புச் செழியன் ரஜினி, விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயனை தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதனை படம் பார்த்து முடித்த பிறகு கூல் சுரேஷ் அன்புச்செடியனின் வார்த்தைகளை குறிப்பிட்டு முதலில் பரபரப்பாக பேசத் தொடங்கிய பின் “ஆமா சார் நீங்க சொன்னது உண்மைதான் ரஜினி, விஜய்க்கு அப்புறம் என் மச்சா சிவகார்த்திகேயன் தான் செம மாசா இருக்காருப்பா” என்று ரிவ்யூ கொடுத்திருக்கிறார். அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.